Powered By Blogger

Saturday, November 17, 2012

பிறிதொரு ஜென்மம் வேண்டும்

பிறிதொரு ஜென்மம் வேண்டும்,
கேட்க மறந்த  பாடல்களை கேட்பதற்கும்,
பழக மறந்த மனிதர்களுடன் உறவாடுவதற்கும் ,
சொல்ல மறந்த உணர்வுகளை பகிர்ந்து கொள்வதற்கும் ,
நண்பர்களுடன் , செலவிடாத நேரங்களை பொக்கிஷபடுத்தவும் ,
பாதியில் முடிந்து போன என் தந்தையின் ஆயுளை நீடிக்கவும் , 
என் அன்பு கணவனிடம் , மறைத்த அன்பினை சொல்லவும் , 
பாதி மாதங்களில் சென்ற என் தங்க மகனை , 
ஒரு ஆண் குழந்தையாக பெற்று வளர்க்க , 
பிறிதொரு ஜென்மம் வேண்டும்........

Saturday, November 3, 2012

கடல்


மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்து ,
பின் கரையை தொட்டவுடன் .
அடங்கி விடும் அலைகளை ,

Wednesday, October 24, 2012

முரண் -தாய்மை

குழந்தையின் , முதல் அழுகையை 
சிரித்து , ரசிப்பதும் , 
முதல் சிரிப்பை அழுது 
ரசிப்பதும் , 
தாய்மையில் மட்டுமே ...

Saturday, October 20, 2012

கடவுள்


கடவுள் , எந்த வடிவில் இருப்பார் ?
எந்த மொழியில் பேசுவார் ?
எந்த மொழிக்கு செவி கொடுப்பார் ..
என்பது மட்டும் தெரிந்தால் போதும் ,
என்னுடைய எந்த மொழியையும் 
கேட்பதில்லை அவர் ...

Sunday, October 14, 2012

சந்தோஷம்

கடற்கரையில் நடக்கும்போதும் , 
துளி துளியான மழையின் ஈரத்திலும் ,
நண்பனின் கரம் பிடித்து தோள் சாயும் நேரத்திலும் , 
அம்மாவின் மடியில், கண்ணீரோடு சாயும் நேரத்திலும் ..
கோவிலில் கரம் தொழுது , மெய் மறக்கும் போதும் 
வாழ்க்கை , சந்தோஷமாகவே ... 

குழந்தை


கோவிலுக்கு செல்லும்போதும் , 
பேருந்துகளில் பயணிக்கும்போதும் ,
உணவகங்களில் உண்ணும்போதும் ,
பூங்காக்களில் அமரும்போதும் ,
கடற்கரைக்கு செல்லும்போதும், 
நம் மனதின் வலிகள்,
மறக்கப்படுகின்றது , 
ஏதோ ஒரு குழந்தையின் 
சிரிப்பாலும், ஸ்பரிசத்தாலும்...

தமிழ்நாடு