Powered By Blogger

Sunday, October 14, 2012

சந்தோஷம்

கடற்கரையில் நடக்கும்போதும் , 
துளி துளியான மழையின் ஈரத்திலும் ,
நண்பனின் கரம் பிடித்து தோள் சாயும் நேரத்திலும் , 
அம்மாவின் மடியில், கண்ணீரோடு சாயும் நேரத்திலும் ..
கோவிலில் கரம் தொழுது , மெய் மறக்கும் போதும் 
வாழ்க்கை , சந்தோஷமாகவே ... 

குழந்தை


கோவிலுக்கு செல்லும்போதும் , 
பேருந்துகளில் பயணிக்கும்போதும் ,
உணவகங்களில் உண்ணும்போதும் ,
பூங்காக்களில் அமரும்போதும் ,
கடற்கரைக்கு செல்லும்போதும், 
நம் மனதின் வலிகள்,
மறக்கப்படுகின்றது , 
ஏதோ ஒரு குழந்தையின் 
சிரிப்பாலும், ஸ்பரிசத்தாலும்...

தமிழ்நாடு