Powered By Blogger

Tuesday, August 16, 2016

பெண் சக்தி







நிர்பயாவை நிர்மூலமாக்கி , நகர வீதியில் எரிந்ததால் ,
முடங்கி விடுவோம் என்று எண்ணினாயோ  அரக்கனே,
ஆயிரம் நிர்பயாக்களின் திடம் கொண்டு நிமிர்ந்து நடப்போமடா...
மீனுப்ரியாவின் மரணத்தால் , மனதில் பீதி கொண்டு
வீட்டிற்குள் துவண்டு விடுவோம் என்று எண்ணினாயோ  அரக்கனே,
லட்சம் மீனுப்ரியாக்களின் தைரிய முகம் கொண்டு முன்னேறுவோமடா ..
சுவாதியை வீதியில் கொடூர கொலை செய்ததால்,
சுருண்டு வீழ்வோம் என்று எண்ணினாயோ  அரக்கனே..
கோடி சுவாதிகளின் சத்துவம் கொண்டு வாழ்வோமடா ..
இவையெல்லாம் கண்டு பெண் பிள்ளைகளை பூட்டி வைப்போம்
என்று எண்ணினாயோ  அரக்கனே...
இல்லை .. உன்னை போன்ற அரக்கர்களை
வதம் செய்யும் தெய்வ சக்தியாக வலம் வர செய்வோம் ....

No comments:

Post a Comment