Powered By Blogger

Saturday, April 23, 2016

நாகரிகம்

அண்ணாச்சி கடையில ,
மளிகை சாமான் வாங்கையில,
கல்லும் மண்ணும் கிடக்குதுனு ,
பள பள மாளிகை கடையில , 
மளிகை சாமான் வாங்கினோம்,
பாலிதீன் பைகளில் பெருமையுடன் 
சுமந்து வந்தோம்...
பால்கார அண்ணாச்சி , பால்ல தண்ணீர் 
கலந்திருக்காருனு   , சொல்லி, சோப்பு நூறை 
கலந்த , பாக்கெட் பால் வாங்கி குடிச்சோம், 
கூடைக்கார கிழவி , பூச்சி வந்த கத்திரிகையும், 
வண்டு வந்த மாம்பழமும் , வைச்சுருகான்னு , 
பூச்சி கூட வேண்டாம்னு சொன்ன , காய்கறிகளையும் , 
பழங்களையும், பழமுதிற்சோலைகளில், 
பதவிசாக வாங்கி தின்னோம், 
இன்னைக்கு, அண்ணாச்சியும், கிழவியும், 
வீதியில பார்கையில, " ஏலே மக்கா நல்லா இருக்கியாலே "
என்று கேட்கையிலே , மருந்து கடையில வாங்கின, 
மருந்து சாமான எங்க போய் மறைக்க... ??