அந்நிய நாட்டிடம் போராடி வென்ற சுதந்திரம், இன்று..
அந்நிய நாட்டின் கலாச்சாரம், உணவு முறைகள் என
அடிமை கட்டுண்டு கிடக்கிறது..
மொழி சுதந்திரம், தாய் மொழியை மறந்து, இன்று
அயல் நாட்டு மொழியிடத்தில் அடிமை கட்டுண்டு கிடக்கிறது..
மக்களின் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம், இன்று
ஜாதி, மதம், கட்சி என்று அடிமை கட்டுண்டு கிடக்கிறது..
பெண்களின் சுதந்திரம், சில இடங்களில் , சீரழிவை பெற்று தந்து
அடிமை கட்டுண்டு கிடக்கிறது ..
அடிமை இந்தியாவில், அனைவரின் மனத்திலும் சுதந்திரமாக,
குடி கொண்டிருந்த தேசபற்று , இன்று சுதந்திர இந்தியாவில் ,
அனைவரின் மனத்திலும் அடிமை கட்டுண்டு கிடக்கிறது ..
No comments:
Post a Comment