Thursday, August 29, 2013
Saturday, August 3, 2013
நட்பு ...
நான் தோல்வியில் துவளும்போழுது , என்னை
தோள் கொடுத்து தாங்கவில்லை ,.. நீ ..
தாங்க இயலாத சோதனைகளை வாழ்வில் சந்திக்கையில் ,
என் சோதனைகளை களையவில்லை .. நீ ..
கண்களில் கண்ணீருடன் நான் தவிக்கும் பொழுது ,
உன் கை விரல்களால் கண்ணீரை துடைக்கவில்லை நீ ..
உறவுகள் அனைத்தும், உதறி சென்ற பொழுது ,
உடன் வரவில்லை நீ ...
மாறாக, நான் துவளும்போழுது , தோள்களில் தட்டி கொடுத்தாய் ,
வெற்றி பெற வைத்தாய் .. நீ
என் சோதனைகளை , சாதனைகளாக மாற்ற கற்று கொடுத்தாய் ,
கடக்க வைத்தாய் நீ ..
என்னை புன்னகை புரிய வைத்து , என் விரல்களால் ,
கண்ணீரை துடைக்க செய்தாய் நீ ..
புது உறவுகளை என் வாழ்வில் ,
பூக்க செய்தாய் நீ ....
நாம் கண்ணீர் சிந்தினாலும் , புன்னகை செய்தாலும் ,
புன்னகையை மட்டுமே பதிலாக , படைக்கும் ,
தெய்வத்தை போன்றவள் நீ .. என் தோழி ...
Subscribe to:
Posts (Atom)