சிறு வயதில் பக்தியோடு மட்டுமே, வலம் வந்த கோவிலை,
இன்று உன் கரம் பிடித்து வலம் வருகிறேன், சிறு வெட்கத்தோடும் ,
சிறு காதலோடும் கூடிய பக்தியோடு...
பச்சை பட்டுடுத்தி , மூக்குத்தியின் ஒளி மிளிர, காட்சி கொடுக்கும்
அம்மனை கை கூப்பி தொழுகையில் , கண்களில் ஏனோ கண்ணீர் ..
பக்தியிலா , இல்லை, .. உன் அருகில் பிரார்த்தனை செய்யும் ஆனந்தத்திலா,
புரியவில்லை ..
சிறுமியாக பெற்றோருடன் அமர்ந்த தெப்பகுள படித்துறை,
அன்று பிரசாதம் அருந்த மட்டுமே பிடிக்கும்..
இன்று உன்னோடு அமர்ந்திருக்கையில் , ரசிக்கிறேன்,
சுற்றியுள்ள காற்றையும் , நம்மோடு அமர்ந்திருக்கும்
ஜோடிகளையும் ..., பொற்றாமரை குளத்தில், தாமரைகளை
தேடும் உன் மலர்ந்த முகத்தையும்..