Powered By Blogger

Tuesday, July 23, 2013

கோவில்,..




சிறு வயதில் பக்தியோடு மட்டுமே,  வலம் வந்த கோவிலை, 
இன்று உன் கரம் பிடித்து வலம் வருகிறேன், சிறு வெட்கத்தோடும் , 
சிறு காதலோடும் கூடிய பக்தியோடு... 
பச்சை பட்டுடுத்தி , மூக்குத்தியின் ஒளி மிளிர, காட்சி கொடுக்கும் 
அம்மனை கை கூப்பி  தொழுகையில் , கண்களில் ஏனோ கண்ணீர் ..
பக்தியிலா , இல்லை, .. உன் அருகில் பிரார்த்தனை செய்யும் ஆனந்தத்திலா, 
புரியவில்லை .. 
சிறுமியாக பெற்றோருடன் அமர்ந்த தெப்பகுள படித்துறை, 
அன்று பிரசாதம் அருந்த மட்டுமே பிடிக்கும்.. 
இன்று உன்னோடு அமர்ந்திருக்கையில் , ரசிக்கிறேன், 
சுற்றியுள்ள காற்றையும் , நம்மோடு அமர்ந்திருக்கும் 
ஜோடிகளையும் ..., பொற்றாமரை குளத்தில், தாமரைகளை 
தேடும் உன் மலர்ந்த  முகத்தையும்..