Powered By Blogger

Saturday, November 17, 2012

பிறிதொரு ஜென்மம் வேண்டும்

பிறிதொரு ஜென்மம் வேண்டும்,
கேட்க மறந்த  பாடல்களை கேட்பதற்கும்,
பழக மறந்த மனிதர்களுடன் உறவாடுவதற்கும் ,
சொல்ல மறந்த உணர்வுகளை பகிர்ந்து கொள்வதற்கும் ,
நண்பர்களுடன் , செலவிடாத நேரங்களை பொக்கிஷபடுத்தவும் ,
பாதியில் முடிந்து போன என் தந்தையின் ஆயுளை நீடிக்கவும் , 
என் அன்பு கணவனிடம் , மறைத்த அன்பினை சொல்லவும் , 
பாதி மாதங்களில் சென்ற என் தங்க மகனை , 
ஒரு ஆண் குழந்தையாக பெற்று வளர்க்க , 
பிறிதொரு ஜென்மம் வேண்டும்........

No comments:

Post a Comment