பிறிதொரு ஜென்மம் வேண்டும்,
பழக மறந்த மனிதர்களுடன் உறவாடுவதற்கும் ,
சொல்ல மறந்த உணர்வுகளை பகிர்ந்து கொள்வதற்கும் ,
நண்பர்களுடன் , செலவிடாத நேரங்களை பொக்கிஷபடுத்தவும் ,
பாதியில் முடிந்து போன என் தந்தையின் ஆயுளை நீடிக்கவும் ,
என் அன்பு கணவனிடம் , மறைத்த அன்பினை சொல்லவும் ,
பாதி மாதங்களில் சென்ற என் தங்க மகனை ,
ஒரு ஆண் குழந்தையாக பெற்று வளர்க்க ,
பிறிதொரு ஜென்மம் வேண்டும்........
No comments:
Post a Comment